RSS

காலிப்பிளவர் சூப்


தேவையான பொருட்கள்:
  • காலிப்பிளவர்    - 1
  • பாசிப்பருப்பு      - 200 கிராம்
  • வெங்காயம்      – 250 கிராம்
  • தக்காளி         – 250 கிராம்
  • பச்சை மிளகாய்  – 10
  • சீரகத்தூள்        - 1/2 ஸ்பூன்  
  • சோம்புத்தூள்     - 1/2 ஸ்பூன்
  • மஞ்சத்தூள்      -  1/4  ஸ்பூன்
  • சீரகம்           -   1/2  ஸ்பூன்      
  • உப்பு       - தேவைக்கு

தாளிக்க:
  • வரமிளகாய்    - 5
  • பட்டை, இலை, மிளகு – சிறிது
  • எண்ணெய்  – தேவைக்கு
  • கறிவேப்பிலை,கொத்தமல்லி


    செய்முறை:
  • ஒரு அகலமான பாத்திரத்தில் பசிப்பருப்பை போட்டு ஒரு லிட்டர் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள், சீரகம், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
  • பருப்பு ஒரு கொதி வந்ததும் சிறிது நேரத்தில் வெங்காயம், தக்காளி, ப.மிள்காய் இவை அனைத்தையும் போட்டு நன்கு வேக விடவும்.
  • பருப்புடன் வெங்காயம், தக்காளி சேர்ந்து நன்கு வெந்ததும் அதில் காலிப்பிளவரைச் (காலிப்பிளவரை நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்)  சேர்த்து நன்கு வேக விடவும். (தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்)                                                    
  • காலிப்பிளவர் வெந்ததும் தேவையான உப்பு,  சீரகத்தூள், சோம்புத்தூள் போட்டு நன்கு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
  • வேறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, இலை, மிளகு, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாள்ளித்து சூப்பில் கொட்டி ஒரு கொதிவிட்டு இறக்கி கொத்தமல்லி தூவினால் சுவையான காலிப்பிளவர் சூப் தயார். 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ருசியான உணவுக்கு சில டிப்ஸ்

  1. உளுத்தம்பருப்பை மட்டும் ஊற வைத்து அரைத்து தேவையான ரவை கலந்து உப்பு போட்டு தோசை ஊற்றினால நன்கு முறுகலான தோசை கிடைக்கும். மாவின் பதம் சாதா தோசை செய்வது போல் செய்யலாம்.
     
  2. தக்காளி சட்னி செய்யும்போது கொஞ்சம் எள்ளையும் வறுத்து கலந்து அரைத்தால் நன்கு ருசியாக இருக்கும்.
     
  3. பாசிபருப்பு பாயசம் செய்யும் போது வெல்லத்தை கெட்டி பாகாக காய்த்தபின் செய்தால் பாயசம் ருசியாக இருக்கும். மறுநாள் இருந்தாலும் ஊசி போகாது.
     
  4. அடைக்கு ஊற வைக்கும்போது பயறுகளை ஊற வைத்து அரைத்தால் சத்து அதிகமாக இருக்கும். கொஞ்சம் கொள்ளையும் சேர்த்து கொள்ளவும்.
     
  5. ஆரஞ்சு பழத்தோலை பொடியாக நறுக்கி, அதனுடன் பச்சை மிளகாயும் வதக்கி வத்தல் குழம்பில் கலந்தால் வாசனையாக இருக்கும்.
     
  6. பூரிக்கு மாவு பிசையும்போது அதில் பிரெட்டையும் போட்டு பிசைந்து பூரி செய்தால் உப்பியும், நன்கு மொறுமொறுப்பாகவும் வரும்.
     
  7. முழம்பில் காரம் அதிகம் ஆகி விட்டால் கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிந்தால் சரியாகி விடும். தக்காளியை பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம்.
     
  8. பாகற்காய் பொரியல் செய்யும் போது கொஞ்சம் தயிர் ஊற்றி ஊற விட்டு கொஞ்சம் நேரம் கழித்து வதக்கினால் கசப்பு அதிகமாக இருக்காது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
sakthininja. Powered by Blogger.